Tuesday, October 14, 2025
Google search engine
Homeஉள்நாடு"அரசு வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்!" – ஐக்கிய காங்கிரஸின் கோரிக்கை

“அரசு வேலைவாய்ப்பில் பட்டதாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்!” – ஐக்கிய காங்கிரஸின் கோரிக்கை

Safwan Salman கிழக்கு மாகாணத்தில், பட்டதாரி ஒருவர் தனது துறையில் வேலைவாய்ப்பு இல்லாததை காரணமாகக் கொண்டு, மாம்பழ வியாபாரியாக மாறியதாகவும், அந்த நிலையை வெளிக்காட்டும் வகையில் அரசாங்கத்திற்கு எதிராகப் பண்புத்தன்மையுடன் போராட்டமொன்றை மேற்கொண்டதாகவும் கடந்த 26ஆம் திகதி செய்திகள் வெளியாகின.

இது நாட்டின் கல்வி பெற்ற இளைஞர்கள் எதிர்கொண்டும், அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குள்ளாக்கும் மிகுந்த வேதனையான ஓர் அடையாளம்.

இதன் அடிப்படையில், ஐக்கிய காங்கிரஸ் அரசாங்கத்திற்கும், பொது நிர்வாக அமைச்சருக்கும், ஜனாதிபதிக்கும் உறுதியாக வலியுறுத்துவது இதுதான்:

நாடளாவிய ரீதியில் அரசுப் பணியிடங்களில் காலியிடங்கள் அனைத்துக்கும் முதன்மையாக பட்டதாரிகளுக்கே நியமனம் வழங்கப்படும் வகையில் நிர்ணயிக்கப்பட்ட அரச கொள்கை அமைய வேண்டும்.

இந்த கோரிக்கை அரசாங்கத்தின் பூரண பொறுப்புணர்வின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட வேண்டும். பட்டதாரிகளின் கல்வித் தகுதியும், திறனும், நாட்டின் நிர்வாகத் துறையை சீர்ப்படுத்தும் சக்தி வாய்ந்த ஆயுதமாகும். இளைஞர்களின் கல்வியும் முயற்சியும் வீணாகாதிருக்க அரசாங்கம் விரைவாக உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஐக்கிய காங்கிரஸ், இந்நோக்கில் உறுதியாகக் குரல் கொடுத்து வருகின்றது. எதிர்காலத்தில் இவ்வாறான போராட்டங்களால் அல்லாமல், சீரான வேலைவாய்ப்பு திட்டங்களால் இளைஞர்கள் நம்பிக்கையுடன் உயிர் வாழும் சூழல் ஏற்பட வேண்டியது அவசியமாகும்.

~

சப்வான் சல்மான்
பொதுச் செயலாளர்
ஐக்கிய காங்கிரஸ்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments