Home / Local / கல்விச் சீர்திருத்தம்: நாட்டின் அவசரத் தேவை

கல்விச் சீர்திருத்தம்: நாட்டின் அவசரத் தேவை

புகைப்படத்தில் உள்ள மாணவி, ஒரே ஆண்டில் சாதாரணத் தரத்துடன் உயர்தரப் படிப்பையும் சிறப்பாக முடித்துள்ளார். இது ஒரு சாதனையாக இருந்தாலும், இதன் பின்னணியில் நாட்டுக்கு அறிவிக்கும் ஒரு பெரிய செய்தி உள்ளது!

“பழைய இரும்பை ஈச்சம்பழத்துக்கு விற்கும்” கல்வி முறை:

தரம் 1 முதல் 11 வரை, மாணவர்கள் “ஏன் படிக்கிறோம்?” எனும் நோக்கம் இல்லாமல், பாடங்களை மனப்பாடம் செய்து பரீட்சைக்கு ஒப்புவிக்கும் சூழ்நிலைதான் நடைமுறை. சமயம், வரலாறு, சித்திரக்கலை போன்ற பாடங்களை 16 ஆண்டுகள் கற்கச் சொல்வது ஏன்? இவற்றின் நடைமுறைப் பயன் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கே தெளிவாகவில்லை!

உலகம் AI-யைப் பற்றி பேசும் காலத்தில், நாம் என்ன பேசுகிறோம்?
– பராக்கிரம சமுத்திரத்தைக் கட்டியவர் யார்?
– துட்ட கெமினு vs எல்லாளன் போர் நடந்த இடம்?
– அனுமான் லங்கையை அழித்த முறை – பறந்தா, பாலமா?

இவை போன்ற “பழைய பஞ்சாங்க” வினாக்கள், இன்றைய அல்லது எதிர்கால சமூகத் தேவைகளுக்கு எவ்விதத்திலும் பொருத்தமற்றவை.

சமயம், வரலாறு தேவையில்லை என்பது இல்லை!

குறைந்தது 2-3 ஆண்டுகளை இந்தப் பாடங்களுக்காக வீணடிக்காமல், கல்விக் காலத்தைக் குறைக்கலாமே! இன்றைய மாணவர்கள் 20 வயதில் பட்டதாரியாகவும், 25 வயதில் PhD முடித்தும், உலகைத் தங்கள் திறமையால் ஆளும் வகையில் கல்விமுறை மாற்றம் தேவை.

இதற்கு என்ன செலவு?

பட்ஜெட்டில் கூடுதல் ஒதுக்கீடு தேவையில்லை! தேவையெனில்:

1. தரம் 1-11 பாடத்திட்டத்தை 2 ஆண்டுகள் குறைக்கவும்.
2. AI, டிஜிட்டல் தொழில்நுட்பம், நவீன விஞ்ஞானம் போன்றவற்றைப் பாடங்களாகச் சேர்க்கவும்.
3. மாணவர்களின் ஆளுமை, படைப்பாற்றல், நடைமுறைத் திறன்களை மேம்படுத்தும் பயிற்சிகளை அறிமுகப்படுத்தவும்.

அரசு மற்றும் கல்வியாளர்களுக்கு வேண்டுகோள்:

இது ஒரு “மலை ஏறும்” சவாலல்ல. அரசியல் கட்சிகள், கல்வித்துறை நிபுணர்கள் ஒன்றாக அமர்ந்து ஒரே நாளில் முடிவெடுக்கக்கூடிய விடயம். எங்கள் இளம் தலைமுறையை பழைய பாடத்திட்டங்களின் சுமையால் சிதைக்காமல், அவர்களின் திறனை உலகத்துடன் இணைக்கும் வாய்ப்பைக் கொடுங்கள்!

✍️ Newspro.lk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *