இலங்கையில் உப்பு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக, உப்பு இறக்குமதிக்கு அரசாங்கத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தபடி, கடந்த காலங்களில் ஏற்பட்ட மழையால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதும், எதிர்வரும் காலங்களிலும் இதே நிலை நீடிக்கும் என்பதும் இதற்கு காரணம்.
இருப்பினும், இலங்கை உப்பு நிறுவனத்தின் பொது முகாமையாளர் R.M.குணரத்ன, தற்போது 12 மெட்ரிக் தொன் உப்பு கையிருப்பில் உள்ளதாகவும், இது அடுத்த இரண்டு மாதங்களுக்கு போதுமானதாகவும் தெரிவித்துள்ளார்.
"தற்போது நுகர்விற்கு தேவையான உப்பு நாட்டில் கையிருப்பிலுள்ளது. சிலர் செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தி விலையை அதிகரித்து வருகின்றனர்" என குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தொழில் அமைச்சுடன் கலந்துரையாடி இறுதி முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
#உப்பு #இறக்குமதி #தட்டுப்பாடு #இலங்கை
0 Comments