ஃபெங்கல் புயல் தற்போது எங்கே நிலை கொண்டுள்ளது..?

தென்மேற்கு வங்கக் கடலில் 23.11.2024 உருவான ஃபெங்கல் புயல் கடந்த வாரம் வங்கக் கடலில் நிலைகொண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கில் பெரும் சேதங்களை ஏற்படுத்திவிட்டு கடந்த 27ஆம் தேதி தமிழக கரையை கடந்து, பரவலாக மழையை பெய்தது. 

புதுச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் கன மழை பெய்ததால், அந்தப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் 50.3 சென்டிமீற்றர் மழை பதிவாகி, புதிய சாதனை படைத்துள்ளது.

இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன, மரங்கள் வேரோடு சாய்ந்தன மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, இந்த புயல் தற்போது வலுவிழந்து வருகிறது மற்றும் நாளை வடக்கு கேரளா- கர்நாடகா கடற்கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதால் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#ஃபெங்கல்புயல் #தமிழகம் #மழை #வெள்ளம் #வானிலை

Post a Comment

0 Comments