அர்ச்சுனா எம்.பிக்கு உள்நுழைய தடை!


யாழ்ப்பாணம்: யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நோயாளியாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நேற்று யாழ் நீதிமன்றம், அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவரை பிணையில் விடுத்து, வைத்தியசாலைக்கு செல்ல வேண்டுமெனில் முன் அனுமதி பெற வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம் அர்ச்சுனாவுக்கு நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் நுழைய அனுமதி மறுத்துள்ளது. 

மேலும், அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வைத்தியசாலை பாதுகாப்பு அதிகாரிகளுக்கு, அர்ச்சுனாவை பலவந்தப்படுத்தாமல் அல்லது துன்புறுத்தாமல் நிலைமையைக் கையாளுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

#அர்ச்சுனா #யாழ்போதனா #நீதிமன்றம் #தடை

Post a Comment

0 Comments