பசிபிக் பெருங்கடலின் தெற்கே அமைந்துள்ள வானுவாட்டு தீவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.3 ஆக பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கம், போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கி.மீ. தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் தாக்கியுள்ளது.
பீதி அடைந்த மக்கள்:
நிலநடுக்கத்தின் தாக்கத்தால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
சுனாமி எச்சரிக்கை:
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக வானுவாட்டு தீவை சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
#வானுவாட்டு #நிலநடுக்கம் #சுனாமி #பசிபிக்பெருங்கடல்
0 Comments