ஏறாவூர்: இஸ்ரேல் நாட்டை எதிர்க்கும் கருத்துக்கள் அடங்கிய கவிதைகளை வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் ஏறாவூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்தவர், ஏறாவூரில் காவல்துறையினரால் பிடிபட்டுள்ளார். அவரிடம் இருந்து இஸ்ரேல் எதிர்ப்பு கவிதைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டவர் மீது விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
#ஏறாவூர் #கைது #இஸ்ரேல் #கவிதைகள் #விசாரணை
ஆதாரம் : சூரியன் செய்தி
0 Comments