ஹட்டனில் கோரவிபத்து: மூவர் பலி, 30க்கும் மேற்பட்டோர் காயம்

ஹட்டன், மல்லியப்பு பகுதியில் இன்று காலை பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இதுவரை மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 30க்கும் மேற்பட்டோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.

ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

விபத்துக்கான காரணம் குறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

#ஹட்டன் #பேருந்துவிபத்து #மல்லியப்பு #டிக்கோயா #கண்டி

Post a Comment

0 Comments