ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக வாங்கிய வருமான வரி உத்தியோகத்தர் மற்றும் களப் பணியாளர் இருவரும் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொஸ்கம பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு வர்த்தகரின் புகாரின் அடிப்படையில், வெவெல்தெனிய உப அலுவலகத்தில் கடமையாற்றும் வருமான வரி உத்தியோகத்தர் மற்றும் மீரிகம பிரதேச சபையின் வீதி பிரிவில் கடமையாற்றிய பணியாளர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
முறைப்பாட்டாளருக்கு சொந்தமான கடையின் வர்த்தக அனுமதிப்பத்திரத்தை வழங்குவதற்கு 1,170 ரூபா பெறுமதியான ஒரு கிலோ கோழி இறைச்சியை இலஞ்சமாக கோரியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, முறைப்பாட்டாளரின் கடைக்கு முன்பாகவே சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
#இலஞ்சம் #ஊழல் #கைது #கொஸ்கம
0 Comments