யாழ் இளைஞன் இலங்கை சுங்கத்துறை உதவி அத்தியேட்சகராக நியமனம்!

நவம்பர் 29, 2024: இலங்கை சுங்கத்துறையின் உதவி அத்தியேட்சகர் பதவிக்கு யாழ்ப்பாணம், நயினாதீவு 07ம் வட்டாரத்தைச் சேர்ந்த கேதீஸ்வரன் துஷ்யந்தன் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். 

இவரது நியமனம் நயினாதீவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளம் வயதிலேயே இத்தகைய உயர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கேதீஸ்வரன் துஷ்யந்தனுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவரது வெற்றி, இளைஞர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது.

Post a Comment

0 Comments